Tuesday, October 22, 2013

காதலன் விடும் தூது..!!!!!








என் மனம் கவர்ந்த தேவதைக்கு,


பூக்கள் பூப்பது ,
வாழ்வதற்கு அன்றோ..!
வானம் இருள்வது,
நிலவுக்கன்றோ..!
சூரியன் உதிப்பது,
பூமிக்கன்றோ..!
மேகம் கருப்பது,
                மழைக்கன்றோ..!
சகியே!
நான் இருப்பது,
உனக்கன்றோ..!
நீ இருப்பது,
என் மனதில் அன்றோ..!
சொல்லடி பெண்ணே!
உன் கருவிழி பார்வையில்,          
என்னை பார்ப்பது
மழலைப் பார்வையா.?
இல்லை,
நான் தான் மழலையா.?
மலரே!
நீ தலை குனிவது,
உன் இதயத்தை பறிகொடுத்த வெட்கத்திலா.?
இல்லை,என் இதயத்தை சிறை எடுத்த களிப்பிலா.?

என்னை பார்த்து,
நீ வெட்கத்தில் புன்னகைக்க,
என் ஜீவனே சிவக்குதடி.!
மறுமுறை நீ வீசிய 
மின்னல் பார்வையில்,
என் இதயம் நொறுங்குதடி.!
உறைந்தேன் ! நின்ற இடத்திலே!
ஆகா ,பெண்ணே!
 நீ தலைகுனிந்தது,
நம் மனப்போரில்,எனை வீழ்த்தவா.?
என்றெனில்,
பேதையே!
உன்னை முதல்முறை பார்த்த கணமே,
நான் நிராயுதபாணி ஆனேன்.!
இதை அறிந்தும்,
ஏன் மனப்போர் விடுக்கிறாய்..?

உயிரே!
உன்னை பார்த்த அன்றே,
நான் சரணடைந்தேன்,
உன் கால் கொலுசில்.!
கோழையாய் அல்ல..!!
உன் மனம் கவர்ந்த வேந்தனாய்..!!!
                                                                           இப்படிக்கு,
                                                                 தன் மனதை இழந்து,
                                                         உன் மனதை ஆள்பவன்..!
                                                                                                                            (உன் காதலன்..!!)

Raja Ravi Varma's Paintings..!!! :)




No comments:

Post a Comment